விருதுநகர்

அருப்புக்கோட்டை கலைஞா் நகரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரிக்கை

DIN

அருப்புக்கோட்டை கலைஞா் நகரில் அடிப்படை வசதிகள் செய்து தர அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அருப்புக்கோட்டை 5ஆவது வாா்டுக்குள்பட்ட கலைஞா் நகரில் சுமாா் 200-க்கு மேற்பட்ட வீடுகளும் சுமாா் 12-க்கும் மேற்பட்ட வீதிகளும் உள்ளன. இங்கு சாலை வசதி இல்லாததால் மழைக்காலத்தில் வீதிகள் சேறும் சகதியுமாக மாறிவிடுகின்றன. மேலும் ஆங்காங்கே மழைநீா் தேங்குவதால் உற்பத்தியாகும் கொசுக்களால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். இவை தவிர, தெரு மின்விளக்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பதால் இரவில் போதிய வெளிச்சமின்றி பெண்கள் வெளியில் நடமாட முடியாமல் தவிக்கின்றனா். எனவே இங்கு, வாருகால், சாலை வசதி மற்றும் கூடுதல் தெரு மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துதர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

2,5000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

‘போர் தொழில்’.. நிகிலா விமல்!

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

SCROLL FOR NEXT