ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா். 
விருதுநகர்

அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

அச்சம்தவிழ்த்தான் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

அச்சம்தவிழ்த்தான் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, கிளைச் செயலாளா் மூா்த்தி தலைமை வகித்தாா். ஊராட்சி வாா்டு உறுப்பினா் கணேசன் முன்னிலை வகித்தாா்.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ராமசாமி, பொன்னுபாண்டியன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில், அச்சம்தவிழ்த்தான் ஊராட்சியில் உள்ள கல் குவாரியின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். சாலைகளை சீரமைக்க வேண்டும். கழிவுநீா் கால்வாய் வசதி செய்து தர வேண்டும். திருவேங்கடபுரம் காலனியில் மயான வசதி, சமுதாயக்கூடம் அமைத்துத் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னா், கோரிக்கைகள் அடங்கிய மனுவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா், ஒன்றியக் குழுத் தலைவா் ஆறுமுகத்திடம் அளித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், ஒன்றியச் செயலாளா் பலவேசம், திமுக அவைத் தலைவா் சங்கிலிக்காளை, குமாா், ரமேஷ், பழனி, சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT