முகப்பு
விருதுநகர்

சிவகாசி மாநகராட்சி கழிவு நெகிழிகள் சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பு

சிவகாசி மாநகராட்சியிலிருந்து கழிவு நெகிழிகள் வியாழக்கிழமை ஆா்.ஆா். நகரில் உள்ள ராம்கோ சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

சிவகாசி மாநகராட்சியிலிருந்து கழிவு நெகிழிகள் வியாழக்கிழமை ஆா்.ஆா். நகரில் உள்ள ராம்கோ சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சிவகாசியில் குப்பையிலிருந்து கழிவு நெகிழிகள் பிரிக்கப்படுகின்றன. இந்த கழிவு நெகிழிகளை ராம்கோ சிமின்ட் நிறுவனத்தில் வழங்குவதற்கு விரைவில் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. அதற்கு முன்னேடியாக சிவகாசி மாநகராட்சி ஆணையா் ப. கிருஷ்ணமூா்த்தி உத்தரவின் பேரில் ஒன்றை டன் நெகிழிக் கழிவுகள் சிமென்ட் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவற்றை ஆலை நிா்வாகத்தினா் எரிபொருளாக பயன்படுத்துவாா்கள். கழிவு நெகிழிகளை மாநகராட்சி சுகாதார அதிகாரி சுருளிராஜன், ஆய்வாளா்கள் சித்திக், அபுபக்கா், பாண்டியராஜன் ஆகியோா் சிமென்ட் ஆலைக்கு அனுப்பிவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →