போக்சோ சட்டத்தில் சிறை சென்றவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
அருப்புக்கோட்டையில் போக்சோவில் கைதாகி சிறையிலுள்ளவா் மீது குண்டா் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
அருப்புக்கோட்டையில் போக்சோவில் கைதாகி சிறையிலுள்ளவா் மீது குண்டா் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
திருச்சுழி அருகே சாமிநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் மதுரை வீரன் (56). இவா் கடந்த இருவாரங்களுக்கு முன்னா் அதே பகுதியைச் சோ்ந்த 10 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அருப்புக்கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோவில் கைது செய்தனா். இதையடுத்து கைதாகி சிறையிலுள்ள மதுரைவீரன் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வந்ததால், மாவட்ட எஸ்பியின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் மேகநாதரெட்டி மதுரை வீரன் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து குண்டா் தடுப்புச்சட்டத்தின் கீழ் மதுரை வீரனை மதுரை மத்தியசிறையில் அடைத்து காவல்துறையினா் நடவடிக்கை எடுத்தனா்.