முகப்பு
விருதுநகர்

மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் பறிமுதல்

 விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரத்தை வருவாய்த்துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

 விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரத்தை வருவாய்த்துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

உடையனேந்தல் கிராமத்தில் மணல் திருட்டைத் தடுக்க குச்சம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் கோட்டைமுத்து மற்றும் கிராம உதவியாளா் ஆகியோா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது குண்டாற்றுப்பகுதியில் தனியாா் இடம் அருகே அனுமதியின்றி பொக்லைன் இயந்திரம் மூலம் டிப்பா் லாரியில் மணலை சிலா் அள்ளிக் கொண்டிருந்தனா். அப்போது வருவாய்த்துறை அதிகாரிகளைக் கண்டதும் பொக்லைன் இயந்திரத்தை விட்டுவிட்டு 2 போ் லாரியில் ஏறி தப்பி ஓடிவிட்டனா். பின்னா் அங்கிருந்த பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினா், காவல்துறையினா் மூலம் திருச்சுழி வட்டாட்சியரிடம் அதை ஒப்படைத்தனா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிந்த திருச்சுழி காவல்துறையினா், தப்பி ஓடிய பொக்லைன் இயந்திர ஓட்டுநா் மற்றும் லாரி ஓட்டுநா் ஆகியோரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.