தேர்தல் முடிந்ததும் வெளியாகும் ஜன நாயகன்?
ஜன நாயகன் வெளியீடு குறித்து...
ஜன நாயகன் திரைப்படத்தைத் தேர்தல் முடிந்ததும் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜன நாயகன் திரைப்படம் பொங்கலையொட்டி ஜனவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், சில காட்சிகள் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி சான்றிதழ் வழங்குவதை தணிக்கை வாரியம் நிறுத்தி வைத்தது.
தொடர்ந்து, நடைபெற்ற வழக்கு விசாரணைகளில் இப்படத்தை மறுதணிக்கை செய்ய நீதிமன்றம் உத்தரவு அளித்தது. இதனால், ஜன நாயகன் வெளியீட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டதுடன் வணிக ரீதியாக சில பின்னடைவுகளும் ஏற்பட்டன.
தற்போது, மறுதணிக்கைக்கான திரைப்படத்தை மத்திய சான்றிதழ் வாரியம் பார்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள் குறிப்பிட்ட மாற்றங்களை மேற்கொள்ளவும் தயாரிப்பு நிறுவனம் தயாராக இருப்பதால் தேர்தல் முடிந்ததும் ஏப்ரல் இறுதியிலேயே ஜன நாயகனைத் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.