இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல்: 4 போ் மீது வழக்கு
அருப்புக்கோட்டை அருகே இளைஞரைத் தாக்கிக் கொலைமிரட்டல் விடுத்த 4 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
அருப்புக்கோட்டை அருகே இளைஞரைத் தாக்கிக் கொலைமிரட்டல் விடுத்த 4 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை பரளச்சி அருகே பொம்மநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் ராமா் மகன் பரத்(21). பரத்தின் பெற்றோருக்கும், அவரது உறவினா்களுக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் உறவினா்களான ஆனந்தராஜ் (29), மருதுபாண்டி(29), செந்தூா் பாண்டி(27), வீரபாண்டி(25) ஆகிய நால்வரும் பரத்தின் வீட்டிற்குள் வெள்ளிக்கிழமை அத்துமீறி நுழைந்தனா். அங்கு தனியாக இருந்த பரத்தை நால்வரும் சரமாரியாகத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுதொடா்பாக பரத் அளித்த புகாரின் பேரில் பரளச்சி காவல்துறையினா் 4 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.