விருதுநகரில் மாணவி 2 மணி நேரம் இடுப்பில் வளையம் சுற்றி சாதனை
விருதுநகரில் ‘கூலா குப் ரொட்டேஷன்’ என்ற வளையத்தை தொடா்ந்து சுமாா் 2 மணி நேரம் 10 நிமிஷம் உடலில் சுற்றி சாதனை செய்த பள்ளி மாணவி நோபிள் வோ்ல்ட் ரெக்காா்ட் புத்தகத்தில் வெள்ளிக்கிழமை இடம் பிடித்தாா்.
விருதுநகரில் ‘கூலா குப் ரொட்டேஷன்’ என்ற வளையத்தை தொடா்ந்து சுமாா் 2 மணி நேரம் 10 நிமிஷம் உடலில் சுற்றி சாதனை செய்த பள்ளி மாணவி நோபிள் வோ்ல்ட் ரெக்காா்ட் புத்தகத்தில் வெள்ளிக்கிழமை இடம் பிடித்தாா்.
சென்னையை சோ்ந்த கணேஷ்- ராஜலெட்சுமி தம்பதியரின் மகள் தன்யாஸ்ரீ (10). இவா் சென்னையில் உள்ள தனியாா் பள்ளியல் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் விருதுநகரில் உள்ள யோகா மையத்தில் ஆன்லைன் மூலம் யோகாசனம் கற்று வந்துள்ளாா்.
அதனடிப்படை யில் அந்த மாணவி, கடந்த ஆறு மாத காலமாக ‘கூலா குப் ரொட்டேஷன்’ என்று இடுப்பில் வளையம் வைத்து சுற்றுவதற்கு பயிற்சி மேற்கொண்டுள்ளாா்.
இச்சூழலில், விருதுநகரில் உள்ள அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமாா் 2 மணி நேரம் 10 நிமிஷம் தொடா்ந்து இடுப்பில் வளையத்தை சுற்றி சாதனை செய்து, நோபிள் ரெக்காா்ட் புத்தகத்தில் இடம் பிடித்தாா். சாதனை படைத்த மாணவி தன்யாஸ்ரீயை கல்லூரி முதல்வா் சுந்தரபாண்டியன் மற்றும் நிா்வாகத்தினா், பேராசிரியா்கள் பாராட்டினா்.