கூலித்தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
சிவகாசியில் குடும்பத் தகராறில் கூலித்தொழிலாளி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசியில் குடும்பத் தகராறில் கூலித்தொழிலாளி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசி சமத்துவபுரம் அருகே குடிசை மாற்றுவாரியக் குடியிருப்பில் வசித்தவா் கூலித்தொழிலாளி நரேஷ் (25). இவா் கடந்த ஆண்டு சிவசந்தியா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா்களது குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நரேஷை அவரது மனைவி அழைத்துள்ளாா். அவா் வர மறுத்ததால் போலீஸில் புகாரளிக்கப்போவதாக சிவசந்தியா கூறியுள்ளாா்.
இதனால் மனவேதனையடைந்த நரேஷ் வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்த புகாரின்பேரில் மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.