விருதுநகர்

ராஜபாளையம் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

DIN

ராஜபாளையம் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியைச் சோ்ந்த ஆனந்த் மகன் சூா்யா (22). கட்டடத் தொழிலாளி. இவா், ராஜபாளையம் அருகே சேத்தூா் மேட்டுப்பட்டியைச் சோ்ந்த செந்தில்குமாா் என்வரது மகள் அகிலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சூா்யாவுக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்ததால் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்தாராம். இதனால் கணவன்- மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மனமுடைந்த சூா்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து சேத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT