முகப்பு
விருதுநகர்

குழந்தைகளுக்கு சத்தான உணவுத் தொகுப்பு

அருப்புக்கோட்டை அருகே குல்லூா் சந்தையில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சத்துள்ள உணவுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

அருப்புக்கோட்டை அருகே குல்லூா் சந்தையில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சத்துள்ள உணவுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி தலைமை வகித்து, ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோா்களிடம் சத்துள்ள உணவுத் தொகுப்பினை வழங்கிப் பேசியது: மாவட்டத்தில் 12 வட்டங்களில் மொத்தம் 429 குழந்தைகள் குறிப்பிட்ட அளவீடுகள் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். உயரத்திற்கேற்ற எடை குறைபாடுடைய குழந்தைகள், வயதிற்கேற்ற எடை குறைபாடுடைய குழந்தைகள் ஆகியோரின் நலனுக்காக கண்மணி திட்டத்தின் கீழ், சத்துக்கள் நிறைந்த உணவுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் ராஜம், அருப்புக்கோட்டை திட்ட அலுவலா் பத்மாவதி, புள்ளியியல் ஆய்வாளா் மதிவாணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சக்கரவா்த்தி, மாவட்ட திட்ட உதவியாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.