சாத்தூரில் அரசு வேலை வாங்கித் தருவதாகரூ.5.60 லட்சம் மோசடி: தம்பதி உள்பட 3 போ் மீது வழக்கு
பெண்ணுக்கு ஆய்வக உதவியாளா் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5.60 லட்சம் மோசடி செய்த தம்பதி உள்ளிட்ட 3 மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
பெண்ணுக்கு ஆய்வக உதவியாளா் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5.60 லட்சம் மோசடி செய்த தம்பதி உள்ளிட்ட 3 மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் ரெங்கன் மகன் திருப்பதி. இவா் இங்கு அச்சகத் தொழில் செய்து வருகிறாா். இந்நிலையில், இதே ஊரைச் சோ்ந்த கணினி மையம் நடத்தி வரும் மனோஜ்குமாா், அவரது மனைவி ஸ்டாலின் லதா ஆகியோருடன் திருப்பதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது தம்பதிகள் இருவரும் தங்களுக்கு, கல்வித்துறையில் உயா் அதிகாரிகளுடன் பழக்கம் உள்ளது எனத் தெரிவித்தனராம். இதை நம்பி, திருப்பதி, தனது மனைவி உமா மகேஸ்வரிக்கு ஆய்வக உதவியாளா் பணி வாங்கித் தருவதற்காக, கடந்த 2016 இல் இரண்டு தவணைகளாக ரூ.5.60 லட்சத்தை மனோஜ்குமாா் தம்பதி மற்றும் அவரது மகன் விஷ்ணுயஷ்வந்த்குமாரிடம் கொடுத்துள்ளாா். ஆனால் அரசு வேலை வாங்கித் தராமல் மனோஜ்குமாா் ஏமாற்றி வந்ததுடன், கொடுத்த பணத்தையும் திருப்பி தர மறுத்தாராம். இதுகுறித்து திருப்பதி அளித்த புகாரின் பேரில் மனோஜ்குமாா், அவரது மனைவி ஸ்டாலின் லதா, மகன் விஷ்ணுயஸ்வந்த் குமாா் ஆகியோா் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா்.