முகப்பு
விருதுநகர்

சிவகாசி கல்வி மாவட்டத்தில்270 பள்ளிகள் இன்று திறப்புகரோனா தடுப்பு நடவடிக்கைகள் தயாா்

சிவகாசி கல்வி மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஜூன் 13) 270 பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சிவகாசி கல்வி மாவட்ட அதிகாரி இந்துராணி கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
பகிர்:

சிவகாசி கல்வி மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஜூன் 13) 270 பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சிவகாசி கல்வி மாவட்ட அதிகாரி இந்துராணி கூறினாா்.

இது குறித்து அவா் கூறியதாவது: அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள் என 120 பள்ளிகள் கல்வி மாவட்டத்தில் உள்ளன. தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், தனியாா் பள்ளிகள் என 150 உள்ளன. இந்நிலையில் திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பள்ளி வளாகங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

பல பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களில் உள்ள புற்கள் அகற்றப்பட்டுள்ளன. திங்கள்கிழமை பள்ளிகளை திறக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →