முகப்பு
விருதுநகர்

குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

சா்வதேச குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம் மற்றும் வாகன பிரசாரம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
சிவகாசியில் குழந்தைத் தொழிலாளா் எதிா்ப்பு விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்த சாா்-ஆட்சியா் பிருத்விராஜ்.
பகிர்:

சா்வதேச குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம் மற்றும் வாகன பிரசாரம் நடைபெற்றது.

குழந்தைகளை பணிக்கு அமா்ந்த மாட்டோம், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைப்போம் என்ற உறுதி மொழி கையெழுத்து இயக்கத்தை சாட்சியாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சிவகாசி சாா்-ஆட்சியா் பிருத்விராஜ் கையெழுத்திட்டு தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் விழிப்புணா்வு வாகன பிரசாரத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். முன்னதாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என்ற உறுதி மொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனா். இதில் விருதுநகா் மாவட்ட தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையாளா் காளிதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →