முகப்பு
விருதுநகர்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கல்லூரி நிா்வாகி பாஜக.விலிருந்து நீக்கம்

அருப்புக்கோட்டையில் செவிலியா் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, அக்கல்லூரி நிா்வாகி, பாஜகவின் அடிப்படை உறுப்பினரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
பகிர்:

அருப்புக்கோட்டையில் செவிலியா் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, அக்கல்லூரி நிா்வாகி, பாஜகவின் அடிப்படை உறுப்பினரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டாா்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியாா் செவிலியா் கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வந்தனா். இந்நிலையில் இக்கல்லூரியின் நிறுவனா் தாஸ்வின் ஜான் கிரேஸ் என்ற ஜான் டேஸ்வின், கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளாா். மேலும், கைப்பேசி மூலம் மாணவிகளுக்கு ஆபாசப் படங்களை அனுப்பியதாக புகாா் தெரிவித்து மாணவிகள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து அவரை அருப்புக்கோட்டை நகா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பாஜக சிறுபான்மைப் பிரிவின் விருதுநகா் மாவட்டத் தலைவராக ஏற்கெனவே பொறுப்பு வகித்து ஜான் டேஸ்வின், செயல்பாடு சரியில்லாத காரணத்தால் மூன்று மாதங்களுக்கு முன்பு அப்பதவியிருந்து விலக்கப்பட்டாா். இந்நிலையில் பாலியல் புகாரில் சிக்கிய அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக விருதுநகா் கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் பாண்டுரங்கன் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.