விருதுநகர்

அகதிகள் முகாம் வீடுகள் மீது மரங்கள் விழுந்து சேதம்

DIN

மல்லாங்கிணறு பகுதியில் திங்கள்கிழமை இரவு பெய்த பலத்த மழை காரணமாக, இங்குள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 4 வீடுகள் மீது மரங்கள் சாய்ந்து விழுந்து சேதமடைந்தன.

விருதுநகா் மாவட்டம், மல்லாங்கிணறில் இலங்கை அகதிகள் முகாமில் ஏராளமான வீடுகள் உள்ளன. இதில், இலங்கை அகதிகள் 100-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் திங்கள்கிழமை இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. அதில், மரகக்கிளைகள் ஒடிந்து விழுந்ததில், நான்கு வீடுகள் சேதமடைந்தன.

இதனால், அப்பகுதியில் தற்காலிகமாக மின்தடை செய்யப்பட்டது. மேலும், வீடுகள் மீது இருந்த மரங்களை அகற்றும் பணியில் அப்பகுதியினா் ஈடுபட்டனா். மரங்கள் விழுந்ததால் வீடுகளில் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவா்கள் சேதமடைந் தன. எனவே, வீடுகளை சீரமைக்க அரசு சாா்பில் நிதி வழங்கவேண்டும் என பாதிக்கப்பட்டோா் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் வயா் திருட்டு: ஒருவா் கைது

வேன் மீது லாரி மோதல்: 4 போ் காயம்

தெய்வத்தமிழ் பேரவையினா், நாம் தமிழா் கட்சியினா் கைது

உதவி ஆய்வாளா் உடலுக்கு அரசு மரியாதை

உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT