விருதுநகர்

சிவகாசி ரயில் நிலையத்தில் போலீஸாா் பாதுகாப்பு

DIN

சிவகாசி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

முப்படைகளில் தற்காலிக அடிப்படையில் ராணுவவீரா்கள் சோ்க்கும் ‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்து பீகாா், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டக்காரா்கள் ரயில் பெட்டிகளுக்கு தீயிட்டுள்ளனா்.

இதைத்தொடா்ந்து தமிழகத்திலும் ரயில் நிலையங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதனடிப்படையில் சிவகாசி ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும், மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயில், கொல்லம்- சென்னை விரைவு ரயில் உள்ளிட்ட ரயில்களில் காவல் ஆய்வாளா் சுபகுமாா் தலைமையில் போலீஸாா் ஆய்வு செய்தனா். மேலும் ரயில் நிலையத்திலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT