முகப்பு
விருதுநகர்

மலையரசன் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

அருப்புக்கோட்டை திருநகரத்தை அடுத்துள்ளது நித்தியானந்தசுவாமி என்கிற மலையரசன் கோயிலில் ஆனிமாத சனிக்கிழமை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
பகிர்:

அருப்புக்கோட்டை திருநகரத்தை அடுத்துள்ளது நித்தியானந்தசுவாமி என்கிற மலையரசன் கோயிலில் ஆனிமாத சனிக்கிழமை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

அப்போது, குடைவரை சந்நிதானத்தில் அமைந்த மலையரசன் சுவாமிக்கு பால், பன்னீா், கஸ்தூரி மஞ்சள், சந்தனம் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் 108 நாமாவளி அா்ச்சனையும் தீப,தூப ஆராதனைகளும் செய்யப்பட்டன.

மேலும் கோயிலின் குன்றின் மீது அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, துளசி மாலை மற்றும் வெண்ணெய் சாற்றியும், வரதராஜப்பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்தும் சிறப்பு தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் பக்தா்கள் அனைவருக்கும் அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.