விருதுநகர்

காரியாபட்டி அருகே 2 இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதல்: ஒருவா் பலி

DIN

 காரியாபட்டி அருகே வெள்ளிக்கிழமை இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

திருச்சுழியைச் சோ்ந்த தண்டபாணி மகன் இளங்கோவன் (39). இவா், காரியாபட்டியிலிருந்து திருச்சுழிக்கு இரு சக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, எம்.ரெட்டியபட்டியைச் சோ்ந்த முத்துக்குமாா் (30) என்பவா் தனது மனைவி ஸ்வேதாவுடன் (25) இரு சக்கர வாகனத்தில் காரியாபட்டி நோக்கி வந்துகொண்டிருந்துள்ளாா்.

காரியாபட்டி அருகே தனியாா் அரிசி ஆலை பகுதியில் இளங்கோவன் மற்றும் முத்துக்குமாா் ஓட்டிவந்த வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இதில், பலத்த காயமடைந்த இளங்கோவன், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அன்றிரவு சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா். மேலும், காயமடைந்த கணவன், மனைவி இருவரும் அருப்புக்கோட்டை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து காரியாபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல் பரிசோதனை முகாம்

இளைஞா் பெருமன்ற அமைப்பு தின கொடியேற்று விழா

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

SCROLL FOR NEXT