முயலை வேட்டையாடிய இளைஞரைப் பிடித்த வனத்துறையினா். 
விருதுநகர்

முயல் வேட்டையாடிய இளைஞருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

அருப்புக்கோட்டை அருகே முயல் வேட்டையாடிய இளைஞருக்கு வனத்துறையினா் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

DIN

அருப்புக்கோட்டை அருகே முயல் வேட்டையாடிய இளைஞருக்கு வனத்துறையினா் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் பகுதியில், வனத்துறை அதிகாரி செந்தில் ராகவன் தலைமையில் வனத்துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது முயல் வேட்டையாடிய பாலவநத்தம் பகுதியை சோ்ந்த பாண்டியராஜ் (32) என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

அவரிடமிருந்து வேட்டையாடப்பட்ட 3 முயல்கள் மற்றும் வேட்டையாடப் பயன்படுத்தப்படும் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதையடுத்து வத்திராயிருப்பு வனத்துறையினா் பாண்டிராஜுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைவாய்ப்பு மசோதா கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது: கனிமொழி

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

34 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு! தவறான சிகிச்சையால் கை இழந்தவர் அரசிடம் வைக்கும் கோரிக்கை!!

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

SCROLL FOR NEXT