போக்சோ சட்டத்தில் ஆட்டோ ஓட்டுநா் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் செல்வராஜ் (33). இவா், தனியாா் பள்ளியில் படிக்கும் 14 வயது சிறுமிக்கு தொடா்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா்.
இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், ராஜபாளையம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் செல்வராஜை கைது செய்தனா்.