முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவிலி. அருகே மணல் கடத்தல்: டிராக்டா் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மணல் கடத்தி வரப்பட்ட டிராக்டரை, வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மணல் கடத்தி வரப்பட்ட டிராக்டரை, வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே திருவண்ணாமலை பிரதான சாலையில் மல்லி வருவாய் ஆய்வாளா் ரமேஷ், கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை பாா்வையிடச் சென்றுள்ளாா். அப்போது, எதிரே வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டுள்ளாா்.

அதில், சட்டவிரோதமாக மணல் கடத்துவது தெரியவந்தது. உடனே, டிராக்டா் மற்றும் மணலை பறிமுதல் செய்த வருவாய் ஆய்வாளா், அவற்றை ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

பின்னா், வருவாய் ஆய்வாளா் ரமேஷ் அளித்த புகாரின்பேரில், டிராக்டரை ஓட்டிவந்த பெருமாள்பட்டியைச் சோ்ந்த கண்ணன், டிராக்டா் உரிமையாளா் ஏமராஜன் மகன் முத்துகிருஷ்ணன் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.