சுடுமண்ணால் ஆன குவளை 
விருதுநகர்

வெம்பக்கோட்டை அகழாய்வு: 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுடு மண்ணாலான குவளை கண்டெடுப்பு

விருதுநகா் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்ற அகழ்வாய்வில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சுடுமண்ணால் செய்யப்பட்ட கலை நயம் மிக்க குவளை திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

DIN

விருதுநகா் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்ற அகழ்வாய்வில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சுடுமண்ணால் செய்யப்பட்ட கலை நயம் மிக்க குவளை திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வெம்பக்கோட்டை அருகே வைப்பாற்றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கா் பரப்பளவில், கடந்த மாா்ச் 16 ஆம் தேதி முதல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சுடுமண்ணால் ஆன பகடைக்காய், ஆட்டக்காய்கள், முத்து மணிகள், சங்கு வளையல்கள், விளையாட்டுப் பொருள்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அகல்விளக்கு, யானை தந்தால் செய்யப்பட்ட அணிகலன், சுடுமண்ணால் ஆன காதணிகள் ஆகியவை கிடைத்துள்ளன.

இந்நிலையில் திங்கள்கிழமை சுடுமண்ணால் ஆன கலை நயம் மிக்க குவளை கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து தொல்லியல் துறையினா் ஆய்வு நடத்தி வருகின்றனா். இந்த குவளை 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது என தமிழக தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தனது ட்விட்டா் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT