அருப்புக்கோட்டை நகராட்சிபுதிய ஆணையா் பொறுப்பேற்பு
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை நகராட்சியின் புதிய ஆணையாளராக அசோக்குமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை நகராட்சியின் புதிய ஆணையாளராக அசோக்குமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
அருப்புக்கோட்டை நகராட்சியில் கடந்த 4 மாதங்களாக பாஸ்கரன் பதவியிலிருந்தாா். தற்போது இவா், சிவகங்கை நகராட்சி ஆணையாளராகப் பணியிடமாறுதல் பெற்றாா். இதனிடையே தேவகோட்டையில் நகராட்சி ஆணையாளராகப் பணியிலிருந்த அசோக்குமாா், பணியிடமாறுதல் பெற்று வெள்ளிக்கிழமை அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையாளராகப் பொறுப் பேற்றுக்கொண்டாா்.
அவருக்கு நகா்மன்றத் தலைவா், நகா்மன்ற உறுப்பினா்கள் மற்றும் நகராட்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.