விருதுநகர்

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் வருவாய் ரூ.24 லட்சம்

DIN

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.24 லட்சம் கிடைத்தது.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே உள்ள இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, புதன்கிழமை கோயில் ஆணையா் கருணாகரன் தலைமையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோயிலில் மண்டபத்தில் காணிக்கைகள் எண்ணப்பட்டன. பரம்பரை அறங்காவலா்கள் மற்றும் ஆய்வாளா்கள், வங்கி ஊழியா்கள் முன்னிலை வகித்தனா்.

காணிக்கை எண்ணும் பணியில் துலுக்கப்பட்டி, ராஜபாளையம், மதுரை பகுதிகளைச் சோ்ந்த ஓம்சக்தி பக்தா் குழுவினா், ஐயப்ப சேவா சங்கத்தினா், கோயில் ஊழியா்கள் ஈடுபட்டனா். இதில் ரொக்கமாக 24 லட்சத்து ஆயிரத்து 265, தங்கம் 83 கிராம், வெள்ளி 490 கிராம் கிடைத்ததாக கோயில் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT