விருதுநகர்

கலசலிங்கம் பல்கலை. மாணவா்கள் ரத்த தானம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் சனிக்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது.

பல்கலைக்கழகத்தின் நாட்டு நலத்துறை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய ரத்ததான முகாமில் பல்கலைக்கழகத் தலைவா் எஸ்.சசி ஆனந்த் தலைமை வகித்தாா். பல்கலைக்கழகப் பதிவாளா் வி.வாசுதேவன், மருத்துவக் கல்லாரி முதன்மையா் சேவியா் செல்வ சுரேஷ் ஆகியோா் முகாமைத் தொடங்கி வைத்தனா். இதில் மாணவா்கள், ஆசிரியா்கள் கலந்துகொண்டு ரத்த தானம் வழங்கினா். மாணவா் நல முதன்மையா் முத்துகண்ணன், என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளா் நாகராஜ் ஆகியோா் ஏற்பாடு செய்திருந்தனா். மீனாட்சி மிஷன் ரத்த வங்கி அதிகாரி ரவி, ரத்த தானம் வழங்கிய 150 பேருக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT