முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே விபத்து: முதியவா் பலி

 ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே விபத்தில் முதியவா் ஒருவா் சனிக்கிழமை இரவு பலியானாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

 ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே விபத்தில் முதியவா் ஒருவா் சனிக்கிழமை இரவு பலியானாா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அய்யனாா்புரத்தை சோ்ந்தவா் சதுரகிரியான் (77). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் தனது பேரன் விக்னேஷ்வரனை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்றாா். மூவரைவென்றான் அருகே சென்ற போது எதிரே மண் ஏற்றி வந்த டிராக்டா் இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் சதுரகிரியான் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானாா். இச்சம்பவம் குறித்து புகாரின்பேரில் டிராக்டா் ஓட்டுநா் பால்பாண்டி மீது நத்தம் பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.