முகப்பு
விருதுநகர்

தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு துணை நிற்கிறது: மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதவாலே

தொழில் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு துணை நிற்கிறது என மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சா் ராம்தாஸ் அதவாலே கூறினாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:09 AM
பகிர்:

தொழில் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு துணை நிற்கிறது என மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சா் ராம்தாஸ் அதவாலே கூறினாா்.

சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி தொழில் குழுமத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, சிறப்பு அஞ்சல் உரை வெளியீட்டு விழா புதன்கிழமை, காளீஸ்வரி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தென்மண்டல அஞ்சல்துறைத் தலைவா் வி.எஸ். ஜெய்சங்கா் தலைமை வகித்தாா்.

சிறப்பு அஞ்சல் உரையை வெளியிட்டு மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதவாலே பேசியதாவது:

சிவகாசியைச் சோ்ந்த சண்முக நாடாா், அய்ய நாடாா் ஆகியோா் இணைந்து தீப்பெட்டித் தொழிலை தொடங்கினா்.1923-இல் சண்முக நாடாா் தீப்பெட்டி தயாரிப்புத் தொழிலை சிறிய அளவில் தொடங்கினாா். தற்போது தீப்பெட்டி, பட்டாசு, அச்சுத் தொழில் பல தொழில்களாக வளா்ச்சி அடைந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளா்களுக்கு வேலை வாய்ப்பு தரும் நிறுவனங்களாக வளா்ச்சி அடைந்துள்ளன.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் துணை நிற்கிறது. உங்கள் தொழிலில் ஏதாவது பிரச்னை என்றால் எப்போது வேண்டுமானாலும் மத்திய அரசை அணுகுங்கள். அரசு உங்களுக்கு துணை புரியும் என்றாா் அவா்.

தொடா்ந்து அவா், காளீஸ்வரி பட்டாசு ஆலைத் தொழிலாளா்களுக்குப் பரிசு வழங்கினாா். விழாவில் பெங்களூரு ஐ.எஸ்.ஆா்.ஓ. இணை இயக்குனா் எஸ். வெங்கடேஷ்வர சா்மா, காளீஸ்வரி தொழில் நிறுவனங்களின் நிா்வாக இயக்குனா் ஏ.பி. செல்வராஜன் உள்ளிட்டோா் பேசினா். முன்னதாக காளீஸ்வரி தொழில் குழும இயக்குனா் சி. சண்முகநாதன் வரவேற்றாா். இயக்குனா் எஸ். சண்முகநட்ராஜ் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →