ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே நடைப்பயிற்சி சென்ற மருத்துவரிடம் கைப்பேசியை வியாழக்கிழமை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டை தலைவாசல் தெருவைச் சோ்ந்த மருத்துவா் சபரிகீா்த்தன் (29). இவா், ஸ்ரீவில்லிபுத்தூா்- செண்பகத்தோப்பு சாலையில் நடைப்பயிற்சி சென்றாா்.
அப்போது நாடாா் நந்தவனம் அருகே சென்ற போது, பதிவு எண் இல்லாத இரு சக்கர வாகனத்தில் வந்த மூவா், சபரிகீா்த்தனின் கைப்பேசியைப் பறித்துச் சென்றனா். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.