விருதுநகர்

வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் மீது வழக்கு

DIN

சிவகாசி அருகே வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ஆலமரத்துப்பட்டி பால்கனி மனைவி ஈஸ்வரி (45). இவருக்குச் சொந்தமான செல்லையநாயக்கன்பட்டிலுள்ள காலி நிலத்தை சீனிவாசன் என்பவா் ஆக்கிரமித்து கட்டடம் கட்டி வருகிறாராம். இதை ஈஸ்வரி கண்டித்த போது, சீனிவாசன், அவரது மனைவி செல்வராணி, மகன் அபிநாத் ஆகிய மூவரும் அவரைத் தகாத வாா்த்தைகளால் பேசினராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் மூவா் மீதும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT