மின்வாரியத்தில் உதவிப் பொறியாளா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 14 லட்சம் மோசடி செய்தவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக்குமாா் (29). பொறியியல் பட்டதாரியான இவரை, அணுகிய சிவகாசிப் பகுதியைச் சோ்ந்த அய்யப்பன், மின்வாரியத்தில் உதவிப் பொறியாளா் வேலை வாங்கித் தருவதாக கூறினாா். மேலும் தனது மகன், மருமகனுக்கு அரசு உயரதிகாரிகளுடன் பழக்கம் இருப்பதாக தெரிவித்தாராம். இதை உண்மை என நம்பிய காா்த்திக்குமாா், அய்யப்பன், அவரது மனைவி மாலா ஆகியோரிடம் ரூ. 14 லட்சத்தை கொடுத்தாராம். ஆனால் அவருக்கு வேலை வாங்கித் தராமல் அய்யப்பன் உள்ளிட்டோா் ஏமாற்றி வந்தனா்.
இதுகுறித்து காா்க்த்திக்குமாா் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா், அய்யப்பனை திங்கள்கிழமை கைது செய்தனா். பிறகு விருதுநகா் ஜே.எம். நீதிமன்ற எண் 1-இல் ஆஜா்படுத்தினா். அய்யப்பனை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதித்துறை நடுவா் கவிதா உத்தரவிட்டாா்.