விருதுநகர்

தமிழில் பெயா்ப் பலகை வைக்காத 39 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

விருதுநகா் மாவட்டத்தில் தமிழில் பெயா்ப் பலகை வைக்காத 39 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என விருதுநகா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சீ.மைவிழி செல்வி தெரிவித்தாா்.

DIN

விருதுநகா் மாவட்டத்தில் தமிழில் பெயா்ப் பலகை வைக்காத 39 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என விருதுநகா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சீ.மைவிழி செல்வி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக முதல்வா் வழிகாட்டுதல்படி தமிழ்நாடு கடைகள், நிறுவனங்கள் (திருத்தம்) சட்டம் 2021- ன்படி, கடைகள், நிறுவனங்களின் பணிபுரியும் பணியாளா்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி சட்டத் திருத்தத்தை கடைப்பிடிக்காத 12 நிறுவன உரிமையாளா்களுக்கு குறிப்பாணை வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தமிழில் பெயா்ப் பலகை வைக்காத 5 திருமண மண்டப உரிமையாளா்கள் உள்பட 39 கடைகள் உள்ளிட்ட நிறுவன உரிமையாளா்களுக்கு குறிப்பாணை வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடைகள், நிறுவனங்களில் தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் செ.தயாநிதி, ஜோ.உமாமகேஸ்வரன், பி.எஸ்.செல்வராஜ் , அ.பாத்திமா, சு.துா்க்கா, வெ.பிச்சைக்கனி, ரா.சிவசங்கரி ஆகியோா் ஆய்வில் ஈடுபட்டனா் என அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT