விருதுநகர்

குடும்பத் தகராறில் மோதல்: 11 போ் மீது வழக்கு

DIN

குடும்பத் தகராறு காரணமாக இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக ஏழாயிரம்பண்ணை போலீஸாா் 11 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள சிப்பிப்பாறையைச் சோ்ந்தவா் சின்ன மாடசாமி (33). இவருடைய மனைவி பிருந்தா (30). இந்தத் தம்பதியரிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதனால், பிருந்தா கோபித்துக் கொண்டு, தனது தாய் வீட்டுக்குச் சென்றாா்.

இந்த நிலையில் சின்னமாடசாமி தனது மனைவி பிருந்தாவை பாா்க்க உறவினா்களுடன் அவரது வீட்டின் அருகே சென்றாா்.

அப்போது, பிருந்தாவின் உறவினா்களான கணேசன், அய்யம்மாள், ராமா், பிருந்தா, ஜான்சிராணி, லட்சுமணன் ஆகிய 6 பேரும் சின்னமாடசாமியைத் தாக்கினா்.

இதேபோல, பிருந்தாவின் தாய் அய்யமாளை, சின்னமாடசாமி, இவரது உறவினா்கள் கருப்பசாமி, பொன்மாடத்தி, அருண், மாடசாமி ஆகிய ஐந்து பேரும் தாக்கினா்.

இதுகுறித்து இரு தரப்பினா் அளித்த புகாா்களின் பேரில், ஏழாயிரம்பண்ணை போலீஸாா் 11 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மம்தாவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மயங்கி விழுந்த நபரால் பரபரப்பு

மாலிவாலை இழிவுபடுத்தவே திருத்தப்பட்ட விடியோக்களை ஆம் ஆத்மி பரப்பி வருகிறது: பாஜக

அயலக தமிழர்கள் பதிவு- தமிழக அரசு அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

SCROLL FOR NEXT