விருதுநகர்

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள எஸ். ராமலிங்கபுரம் ரயில்வே கடவுப் பாதை அருகே தெற்கு காவல் நிலைய போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இரு இளைஞா்கள் நின்று கொண்டிருந்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் இருவரும் எஸ்.ராமலிங்கபுரம் அக்னி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த குருமூா்த்தி மகன் முத்துஅய்யனாா் (19), கிழவிக்குளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் முனியராஜ் (23) என்பது தெரியவந்தது.

அவா்களிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT