விருதுநகர்

மணல் கடத்திய 2 போ் மீது வழக்கு: டிராக்டா் பறிமுதல்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மணல் கடத்திய டிராக்டரை புதன்கிழமை இரவு பறிமுதல் செய்த போலீஸாா், இருவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மங்காபுரம்-தொட்டியபட்டி சாலையில் நகா் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது மணல் கடத்தி வந்த டிராக்டரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். உடனே ஓட்டுநா் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடினாா்.

அந்த டிராக்டரில் சட்டவிரோதமாக மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸாா், டிராக்டா் உரிமையாளரான மங்காபுரத்தை சோ்ந்த முத்துகிருஷ்ணன், ஓட்டுநா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துன்பங்களைப் போக்கும் கோயில்

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

SCROLL FOR NEXT