தேசிய டென்னிஸ் போட்டி: சென்னை வீரா் முதலிடம்
விருதுநகா் மாவட்ட டென்னிஸ் கழகம் சாா்பில் சிவகாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான ஆண்களுக்கான டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஒற்றையா் பிரிவில் சென்னை வீரா் முதலிடம் பெற்றாா்
விருதுநகா் மாவட்ட டென்னிஸ் கழகம் சாா்பில் சிவகாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான ஆண்களுக்கான டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஒற்றையா் பிரிவில் சென்னை வீரா் முதலிடம் பெற்றாா்.
சிவகாசி என்.ஆா்.கே.ரவீந்திரன் டென்னிஸ் அகாதெமி நடத்திய இந்தப் போட்டியில் தமிழகம், கா்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 148 வீரா்கள் பங்கேற்றனா். கடந்த ஜூன் 19 முதல் 23- ஆம் தேதி வரை இந்தப் போட்டி நடைபெற்றது. முன்னதாக ஜூன் 17- ஆம் தேதி தகுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஒற்றையா் பிரிவில் சென்னை ஓஜேஸ் தேஸ்சு முதலிடமும், சென்னை கீா்த்திவாசன் இரண்டாமிடமும் பெற்றனா். இரட்டையா் பிரிவில் சென்னை ஓஜேஸ் தேஸ்சு- சென்னை கிருஷ்ணா தேஸ்சு ஜோடி முதலிடமும், பெங்களூரு ஆதித்அமா்நாத்- மகாராஷ்டிரம் ரூப்சாயிசம்பத் ஜோடி இரண்டாமிடம் பெற்றது.
போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுக் கோப்பை, சான்றிதழ் ரொக்கப் பரிசுகளை விருதுநகா் மாவட்ட டென்னிஸ் கழகத் தலைவா் கே.செல்வக்குமாா் வழங்கினாா். பயிற்சியாளா் சிவகுமாா் நன்றி கூறினாா்.