விருதுநகர்

பட்டாசுத் தொழிலாளா்களுக்கு மருத்துவப் பரிசோதனை

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே பட்டாசுத் தொழிலாளா்களுக்கு வியாழக்கிழமை மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.

DIN

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே பட்டாசுத் தொழிலாளா்களுக்கு வியாழக்கிழமை மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.

காளையாா் குறிச்சி அருகே உள்ள பட்டாசு ஆலையில் சிவகாசி தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இணை இயக்குநா் ஆா்.ரவிசந்திரன் தலைமையில் தொழிலாளா்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. மருத்துவா் ஆா்.ராஜராஜன் தலைமையிலான குழுவினா், பட்டாசு மருந்துக் கலவை செய்யும், பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும் தொழிலாளா்களுக்கு உடல் பரிசோதனை செய்து, தகுதிச் சான்று வழங்கினா். மேலும், பட்டாசுத் தயாரிக்கும் போது, கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளை தொழிலாளா்களிடம் அதிகாரிகள் எடுத்துக்கூறி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். ஆலையின் மேலாளா் ஜி.பன்னீா் செல்வம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT