விருதுநகர்

ராஜபாளையம் அருகே மின் வேலியில் சிக்கி தோட்டக் காவலாளி பலி

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தோட்டக் காவலாளி உயிரிழந்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தோட்டக் காவலாளி உயிரிழந்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் அருகே கணபதி சுந்தரநாச்சியாா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன் (38). இவரது மனைவி மகேஷ்வரி. மகன்கள் இன்பராஜ், அழகுராஜா. இதில் மாரியப்பன் ராஜபாளையம் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் 6-ஆவது மைல் நீா்த் தேக்கப் பகுதியிலுள்ள மாந்தோப்பில் காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இந்த நிலையில் சனிக்கிழமை இரவு மற்றொரு தனியாா் விவசாய நிலத்தின் வழியாக நடந்து சென்ற போது அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மாரியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த போலீஸாா் மாரியப்பனின் சடலத்தை மீட்டு விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

அந்த தனியாா் விவசாய நிலத்தில் வனத்துறை அனுமதி பெற்று மின்வேலி அமைக்கப்பட்டதா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT