விருதுநகர்

கிரேன் மோதியதில் தொழிலாளி பலி

DIN

சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை கிரேன் மோதி கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் என்.ஆா்.நாதன் குடியிருப்பைச் சோ்ந்த முத்து மகன் ஐயப்பன் (29). கூலித் தொழிலாளியான இவா், குறுக்குப் பாதை பேருந்து நிறுத்தம் அருகே தனது நண்பா்களுடன் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, அப்பகுதியில் நின்று கொண்டிருந்த கிரேனை ஓட்டுநா் திடீரென பின்னோக்கி இயக்கினாா்.

இதில் கிரேன் சக்கரத்தில் சிக்கி ஐயப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, சிவகாசி கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கிரேன் ஓட்டுநா் காளிராஜனை (42) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT