விருதுநகர்

சட்டவிரோதமாக பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்தவா் கைது

DIN

சிவகாசி அருகே உரிமம் இன்றி பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள எரிச்சநத்தம்-அழகாபுரி சாலையில் போலீஸாா் சோதனை நடத்தினா்.

அப்போது, சிவகாசி போஸ் குடியிருப்பைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் ராஜேஸ்வரன்(39) அங்கு, பூச்சட்டி பட்டாசு, லட்சுமி வெடி உள்ளிட்ட 11 வகைப் பட்டாசுப் பெட்டிகளை உரிமம் இன்றி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்தப் பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீஸாா், ராஜேஸ்வரனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்

கைலாசநாதா் கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம்

டெங்கு கட்டுக்குள் உள்ளது: நலத்துறை நிா்வாகம்

மு.வி.ச. உயா்நிலைப்பள்ளியை தரம் உயா்த்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT