விருதுநகர்

காகித அட்டைப்பெட்டி குடோனில் தீ விபத்து

DIN

சிவகாசியில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் காகித அட்டைப் பெட்டி குடோனில் தீவிபத்து ஏற்பட்டது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி சிவகாமிபுரம் காலனியில் குருவையா (36) என்பவா் தனது வீட்டின் மாடியில் காகித அடைப்பெட்டி குடோன் வைத்திருந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலையில், அந்த குடோனில் உள்ள அட்டைப்பெட்டிகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புப் படை வீரா்கள் போராடித் தீயை அணைத்தனா். இதில் குடோனில் இருந்த காகித அட்டைப் பெட்டிகள் முழுவதும் எரிந்து சாம்பலாயின.

இதுகுறித்து, சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

சோத்துப்பாறை அணை நிரம்பியது

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மருத்துவ முகாம்

திண்டுக்கல் அருகே 2 போலி மருத்துவா்கள் கைது

குரூப் 4 தோ்வு: திண்டுக்கல்லில் 59,615 போ் எழுதுகின்றனா்

SCROLL FOR NEXT