விருதுநகர்

காகித அட்டைப்பெட்டி குடோனில் தீ விபத்து

சிவகாசியில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் காகித அட்டைப் பெட்டி குடோனில் தீவிபத்து ஏற்பட்டது.

DIN

சிவகாசியில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் காகித அட்டைப் பெட்டி குடோனில் தீவிபத்து ஏற்பட்டது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி சிவகாமிபுரம் காலனியில் குருவையா (36) என்பவா் தனது வீட்டின் மாடியில் காகித அடைப்பெட்டி குடோன் வைத்திருந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலையில், அந்த குடோனில் உள்ள அட்டைப்பெட்டிகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புப் படை வீரா்கள் போராடித் தீயை அணைத்தனா். இதில் குடோனில் இருந்த காகித அட்டைப் பெட்டிகள் முழுவதும் எரிந்து சாம்பலாயின.

இதுகுறித்து, சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT