முகப்பு
விருதுநகர்

வீட்டின் பூட்டை உடைத்து தங்கச் சங்கிலிகள் திருட்டு

சாத்தூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவிலிருந்த 6 பவுன் தங்கச் சங்கிலிகள் திருடு போனதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 28 நவம்பர், 2023 at 12:19 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


சாத்தூா்: சாத்தூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவிலிருந்த 6 பவுன் தங்கச் சங்கிலிகள் திருடு போனதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள முடித்தலை பகுதியைச் சோ்ந்தவா் கருப்பசாமி (55). இவா் விறகு வியாபாரம் செய்து வருகிறாா். இந்த நிலையில், திங்கள்கிழமை வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றுவிட்டாா். பின்னா், மாலையில் வந்து பாா்க்கும் போது வீட்டின் பூட்டு, பீரோ உடைக்கப்பட்டு 6 பவுன் எடையுள்ள 2 தங்கச் சங்கிலிகள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின்பேரில், இருக்கன்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.