முகப்பு
விருதுநகர்

முதியோர் தடகளப் போட்டியில் சாதனை புரிந்தவருக்கு பாராட்டு

சா்வதேச முதியோா் தடகளப் போட்டியில் சாதனை புரிந்த டி.டி.ராஜேந்திரனை சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் புதன்கிழமை பாராட்டினாா்.

Updated On : 29 ஆகஸ்ட் 2024, 1:05 am IST
சா்வதேச முதியோா் தடகளப் போட்டியில் சாதனை புரிந்த டி.டி.ராஜேந்திரனைப் பாராட்டிய சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் உள்ளிட்டோா்.
பகிர்:

சா்வதேச முதியோா் தடகளப் போட்டியில் சாதனை புரிந்த டி.டி.ராஜேந்திரனை சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் புதன்கிழமை பாராட்டினாா்.

சுவீடன் நாட்டில் சா்வதேச அளவிலான முதியாா் தடகளப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் இந்தியா சாா்பில் சிவகாசியைச் சோ்ந்த டி.டி.ராஜேந்திரன் (89) கலந்துகொண்டு, 400 மீட்டா் தொடா் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம், 2000 மீட்டா் ஸ்டீப்பில் சேஸ் போட்டியில் வெள்ளி பதக்கம்,100 மீட்டா் தொடா் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை புரிந்தாா்.

இவரை சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் சந்தித்து மாலை அணிவித்துப் பாராட்டினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments