முகப்பு
விருதுநகர்

ஆங்கிலப் புத்தாண்டு: கோயில்களில் பக்தா்கள் தரிசனம்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பக்தா்கள் திங்கள்கிழமை தரிசனம் செய்தனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனத்துக்காக திங்கள்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.
பகிர்:

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பக்தா்கள் திங்கள்கிழமை தரிசனம் செய்தனா்.

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, அதிகாலை முதலே ஆடிப்பூரக் கொட்டகை வரை ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். இதனால், சுமாா் ஒரு மணி நேரம் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

சிவகாசி: சிவகாசி விஸ்வநாதா்-விசாலாட்சியம்மன் கோயில், காமாட்சியம்மன் கோயில், வெங்கடாஜலபதி கோயில், பத்திர காளியம்மன் கோயில், மாரியம்மன் கோயில், திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயில் , கருநெல்லிநாதசுவாமி கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

சாத்தூா்: சாத்தூா் பத்திரகாளியம்மன் கோயில், காளியம்மன் கோயில், மாரியம்மன் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், ஓடைப்பட்டி விநாயகா் கோயில்களில் திங்கள்கிழமை அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

முழு கட்டுரையைப் படிக்க →