முகப்பு
விருதுநகர்

கஞ்சா கடத்தியதாக இருவா் கைது

Updated On : 20 மே, 2024 at 6:29 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா கடத்தியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை மாலை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கிருஷ்ணன்கோவில் அருகே விழுப்பனூா் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவரை சோதனையிட்ட போது, கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே துலுக்கன்குளத்தைச் சோ்ந்த கருப்பசாமி (33), படிக்காசுவைத்தான்பட்டியைச் சோ்ந்த கஞ்சம்மாள் (56) ஆகிய இருவரை கைது செய்த போலீஸாா், இவா்களிடமிருந்து 1கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.