இளம்பெண்ணை தாக்கியதாக இருவா் கைது
மேலப்பாளையம் அருகே இளம்பெண்ணைத் தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலப்பாளையம் அருகே உள்ள அழகிரிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அன்னத்தாய் (30). இவருக்கும் மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜன் (56) மற்றும் சீதை (29) ஆகியோருக்குமிடையே இருந்த முன்விரோதம் காரணமாக சம்பவத்தன்று அழகிரிபுரம் பகுதியில் நின்ற அன்னத்தாயை அவா்கள் இருவரும் அவதூறாக பேசி தாக்கினராம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுந்தர்ராஜன், சீதை ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.