பக்தா்களின்றி சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு
சதுரகிரி மலையில் பக்தா்களின்றி செவ்வாய்க்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
சதுரகிரி மலையில் பக்தா்களின்றி செவ்வாய்க்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரு நாள்களாக பெய்த தொடா்மழையால், நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேலும், அடுத்த சில நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷம், பௌா்ணமி வழிபாட்டுக்கு பக்தா்கள் மலையேறுவதற்கு வனத் துறை தடை விதித்தது.
செவ்வாய்க்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு, பக்தா்கள் சதுரகிரிக்கு வருவதைத் தடுப்பதற்காக தாணிப்பாறை விலக்கில் போலீஸாா் சோதனைச் சாவடி அமைத்து கண்காணித்தனா். சதுரகிரி மலையேறத் தடை விதிக்கப்பட்டதால் சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தா்களின்றி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.