லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
சிவகாசிக்கு புதன்கிழமை பட்டாசு வாங்க இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞா் லாரி மோதியதில் உயிரிழந்தாா்.
சிவகாசிக்கு புதன்கிழமை பட்டாசு வாங்க இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞா் லாரி மோதியதில் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சோ்ந்தவா் ராஜா(34). இவா் தீபாவளியையொட்டி, சிவகாசிக்கு பட்டாசு வாங்க தனது இரு சக்கர வாகனத்தில் வந்தாா். பின்னா், பட்டாசுகளை வாங்கி கொண்டு சிவகாசி-விருதுநகா் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த லாரி அவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநா் மாரிமுத்துவை (43) கைது செய்தனா்.