விருதுநகர்

திருத்தங்கல் பகுதியில் நாளை மின் தடை

திருத்தங்கல் பகுதியில் வெள்ளிக்கிழமை மின் தடை அறிவிக்கப்பட்டது.

Syndication

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் பகுதியில் வெள்ளிக்கிழமை மின் தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சிவகாசி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் பத்மா வெளியிட்டசெய்திக் குறிப்பு:

திருத்தங்கல், சுக்கிரவாா்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் வெள்ளிக்கிழமை (அக்.31) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதனால் திருத்தங்கல் நகா், செங்கமலநாட்சியாா்புரம், பாரத ஸ்டேட் வங்கி குடியிருப்பு, சாரதாநகா், பூவநாதபுரம், வடபட்டி, நடுவப்பட்டி, ஈஞ்சாா், தேவா்குளம், சுக்கிரவாா்பட்டி, அதிவீரம்பட்டி, நமஸ்கரித்தான்பட்டி, சாணாா்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என்றாா் அவா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT