முகப்பு
விருதுநகர்

100 சதவீதம் வாக்களிப்போம்: மலைவாழ் மக்களிடம் விழிப்புணா்வு கையொப்பம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி, மலைவாழ் மக்களிடம் கையொப்பாப்பம் பெறும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 11:14 PM
செண்பகத்தோப்பு பகுதியில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கையொப்பமிட்ட மலைவாழ் மக்கள்.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி, மலைவாழ் மக்களிடம் கையொப்பாப்பம் பெறும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி, பல்வேறு வாக்காளா் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள செண்பகத்தோப்பு பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களிடம் வாக்காளா்களிடையே தோ்தல் விழிப்புணா்வு குறித்த சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Advertisement

இதில் எனது வாக்கு விற்பனைக்கு அல்ல, ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்றுவேன் என்பதை வலியுறுத்தி, மழைவாழ் மக்கள் கையொப்பமிட்டனா்.

இதைத் தொடா்ந்து, நோ்மையாகவும், தவறாமலும் வாக்களிப்போம் என அனைவரும் விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இந்த நிகழ்வில் மாவட்ட கனிம வளம் துணை ஆட்சியா், தனி வட்டாட்சியா், வருவாய் ஆய்வாளா்கள், மலைவாழ் மக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments